யாழ்.மாநகர முதல்வர் வேட்பாளரை அறிவித்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ். மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக தீபன் திலீசன் போட்டியிடவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.மாநகர சபையின் முதன்மை வேட்பாளர்
நீண்ட காலமாக கட்சியுடன் இணைந்து செயற்பட்டு, முக்கியமான கால கட்டத்திலும் கட்சியுடன் இணைந்து பயணித்ததன் அடிப்படையில் மத்திய குழுவில் யாழ் .மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக தீபன் திலீசன் களமிறக்கப்படவுள்ளார்.

மேற்படி தீர்மானம் கட்சியின் மத்திய குழுவினால் எடுக்கப்பட்டுள்ளதுடன்,பிரதி முதல்வர் பதவிக்கு கட்சியின் நீண்ட கால உறுப்பினர் வை.கிருபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி
பொருளாதார நெருக்கடி நிலையில் மாநகர சபை எல்லைக்குள் வாழுகின்ற மக்களுக்கு ஒரு நேர்மையான ஒரு பணியினை ஆற்றலாம் என கடைசி வரை எதிர்ப்பார்க்க முடியாது.

மாநகர சபை நிர்வாகம் நேர்மையான ஒரு பாதைக்குள் செல்லாமல் தங்களுக்கு நன்மையை தேடாமல் இருக்கின்ற வளங்களை வைத்து எந்த அளவுக்கு அதனை மக்களுக்கு திருப்திபடுத்தி கொடுக்கலாம்.

மனப்பாங்குடன் ஒரு தரப்பு ஆட்சிக்கு வராமல் மாநகர சபை செயற்பாட்டினை மாற்றியமைக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.