நாட்டில் முதல்முறையாக கொரோனாவுக்கு பலியான மருத்துவர்

சிறிலங்காவில் முதல்முறையாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வைத்தியர் ஒருவர் கொழும்பு அங்கோடை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு மட்டக்குளியவில் வசிக்கும் 89 வயது வைத்தியர் என தெரவிக்கப்படுகிறது.

உயிரிழந்த மருத்துவர் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றதாகவும், நான்கு தனியார் மருத்துநிலையங்கள் நீண்ட காலமாக வைத்திருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.