கோட்டாபயவின் உத்தரவு – நாளை இறுதித் தீர்மானம்? மக்கள் அச்சத்தில்

இலங்கையில் கொரோனா அச்சம் காரணமாக முடக்கப்பட்டுள்ள மற்றும் முடக்கப்படாத பிரதேசங்கள் குறித்து நாளைய தினம் முக்கிய தீர்மானம் எடுக்கவுள்ளதாக இராணுவத் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் கொரோனா அச்சம் குறித்து இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் முடக்கப்படாத பகுதிகள் என்பவற்றில் தொற்றாளர்கள் இனங்காணப்படும் எண்ணக்கை தொடர்பில் வார இறுதி நாட்களில் மதிப்பிட்டு தனிமைப்படுத்தல் தொடர்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.

தற்போது முடக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் முடக்கப்படாத பகுதிகளில் எவ்வாறு தொற்றாளர்கள் இனங்காணப்படுகிறார்கள் என்பதை வார இறுதி நாட்கள் வரை மதிப்பிட்டதன் பின்னர் தனிமைப்படுத்தல் குறித்து தீர்மானிக்கப்படும்.