இலங்கைக்கு நிதி உத்தரவாதம் உடனடியாக தேவை – அமெரிக்காவின் திறைசேரி செயலாளர்

இலங்கைக்கான நம்பகமான நிதி உத்தரவாதம் மிகவும் அவசரம் என அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் யனெட் யெலென் தெரிவித்துள்ளார்

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் அழுத்தத்தில் உள்ள உருவாகிவரும் சந்தைகளிற்கான அர்த்தபூர்வமான கடன் நடவடிக்கைகளில் சீனா உட்பட அனைத்து கடன் கொடுப்பனவு நாடுகளும் கலந்துகொள்ளவேண்டும் என அமெரிக்கா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல நாடுகளின் முன்னோக்கிய வளர்ச்சியை தடுத்துவைத்துள்ள கடன் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு இணைந்து பணியாற்றுவது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

குறைந்தவருமான நாடுகளில் 55 வீதமானவை கடன் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளன என சர்வதேச நாணயநிதியம் மதிப்பிடுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்