சீனாவின் ராடர் தளத்திற்கு அரசாங்கம்அனுமதியளித்துள்ளதா? அலிசப்ரி தெரிவித்துள்ளது என்ன?

இலங்கையில் சீனாவின் ராடர் தளத்திற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக வெளியான தகவல்களை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நிராகரித்துள்ளார்.

இலங்கையில் சீனா ராடார் தளத்தினை அமைப்பதற்கான அனுமதியை அரசாங்கம்வழங்கியுள்ளது என வெளியாகியுள்ள தகவல்களிற்கு மத்தியில் அவ்வாறான வேண்டுகோள்கள் எவையும் இதுவரை விடுவிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.இலங்கை அரசாங்கம் அவ்வாறான அனுமதி எதனையும் வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.