மாணவனை புலமைப்பரிசில் பரீட்சைக்கு அனுமதிக்காத பாடசாலை : முல்லைத்தீவில் சம்பவம்

மாணவன் ஒருவரை புலமைப்பரிசில் பரீட்சை எழுதவிடாமல் தடுத்த பாடசாலை நிர்வாகத்திற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பெற்றோர் முறைப்பாடு அளித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்பட்ட புதுக்குடியிருப்பு கோம்பாவில் பாடசாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பாட்டிக்கு துணையாக இருந்த தமிழ் சிறுமி மாயம் : தீவிர தேடுதலில் காவல்துறை
பாட்டிக்கு துணையாக இருந்த தமிழ் சிறுமி மாயம் : தீவிர தேடுதலில் காவல்துறை
மாணவனுக்கு சத்திரசிகிச்சை
புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராமத்தில் கூலிவேலைசெய்து தங்கள் குடும்பத்தினை கொண்டு செல்லும் குடும்பத்தின் இரண்டாவது பிள்ளையான தரம் 5 இல் கல்விகற்ற மாணவனுக்கு இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மாணவனது சகோதரி தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 163 புள்ளி பெற்று சித்தியடைந்து கல்வி கற்று வருகின்றார். இந்த நிலையில் மாணவனை புலமை பரிசில் பரீட்சைக்காக பெற்றோர்கள் தயார்படுத்தியுள்ளார்கள் இதன்போது மாணவனுக்கு வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக வயிற்று பகுதியில் பாரிய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது இதனால் மாணவன் இரண்டு மாத காலமாக பாடசாலை செல்லவில்லை அதற்கான மருத்துவ அறிக்கையினையும் பெற்றோர்கள் காட்டியுள்ளார்கள்.

நயினை நாகபூசணியையும் விட்டுவைக்காத சீன தூதுவர்
நயினை நாகபூசணியையும் விட்டுவைக்காத சீன தூதுவர்
பரீட்சை எழுத அனுமதிக்கமுடியாது
இந்த நிலையில் புலமை பரிசில் பரீட்சைக்கான நாள் கடந்த 15.10.2023 அன்று நெருங்கி வந்தவேளை பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் பெற்றோரை அழைத்து மாணவனை பரீட்சை எழுத அனுமதிக்கமுடியாது என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பாடசாலை அதிபரிடமும் பெற்றோர் முறையிட்ட போது மாணவன் 70 புள்ளிகளுக்கு கீழ்தான் பரீட்சைகளில் புள்ளி எடுக்கின்றார் இது போதாது புலமைப் பரிசில் பரீட்சை முக்கியமில்லை அதனால் பிரச்சினை இல்லை பிறகு படிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரித்தானிய பிரஜைக்கு நேர்ந்த துயரம்
இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரித்தானிய பிரஜைக்கு நேர்ந்த துயரம்
பெற்றோரிடம் வாங்கப்பட்ட கடிதம்
இந்த நிலையில் பாடசாலை நிர்வாகம் பெற்றோரிடம் கடிதம் ஒன்றினை எழுதி கையெழுத்தும் வாங்கியுள்ளனர். பாடசாலை நிர்வாகம் தங்கள் பரீட்சை விகிதத்தினை சிறப்பாக காட்டவேண்டும் என்பதற்காகவும் படிப்பித்த ஆசிரியர் தான் படிப்பித்த பிள்ளைகள் அனைவரும் சித்தியடைந்துள்ளனர் என பெருமை பேசவும் உடல் உபாதை காரணமாக பாதிக்கப்பட்ட ஒரு மாணவனை பரீட்சை எழுதவிடாமல் தடுத்துள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மாணவன் உளவியல்ரீதியில் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாக பெற்றோர் தெரிவித்தனர். இப்போது பாடசாலை போவதற்கு விருப்பம் அற்ற நிலையில் பரீட்சை எழுதாதது அவனது பெரிய ஒரு ஆசையினை தடுத்துள்ளதை போன்று காணப்படுவதாகவும் அவனுக்கு மனக்கவலையாக இருப்பதாக பெற்றோர் தெரிவித்தனர்.

பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி மாணவர்களின் கலைத் திறன்களை பாராட்டிய கந்தையா பாஸ்கரன்(படங்கள்)
பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி மாணவர்களின் கலைத் திறன்களை பாராட்டிய கந்தையா பாஸ்கரன்(படங்கள்)
இது தொடர்பாக சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
அத்தோடு குறித்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் முறைப்பாடு செய்துள்ளனர்.

பாடசாலை சமூகம் நற்பெயர் எடுக்கவேண்டும் என்பதற்காக ஒரு பாடசாலை மாணவரின் பரீட்சையினை தடைசெய்வது என்பது மனித உரிமை மீறல்களில் ஒன்றாக கருதப்படவேண்டும் இது தொடர்பில் கல்வி திணைக்களமோ கோட்டக்கல்வி அலுவலகமோ,சிறுவர் உரிமைதொடர்பில் அக்கறை கொண்ட அமைப்புக்களோ உடனடியாக கவனத்தில் எடுக்கவேண்டும் என்பதுடன் இனி இவ்வாறான சம்பவம் வேறு எந்த கஸ்ரப்பட்ட ஏழைக்குடும்பங்களுக்கும் ஏற்படக்கூடாது என்பது பெற்றோரின் எதிர்பார்ப்பாகும்.