LATEST
பிரிக்ஸ் மாநாட்டுக்காக இந்தியா வந்தார் ஷி ஜின்பிங் வன்முறை வரலாற்று நபர்களுடன் ஒப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது – எம்பாப்பே சோகம்! இளைஞர்களை ஏமாற்றும் நிலை நீடிக்காது – செல்வம் அடைக்கலநாதன் உலக சந்தை உயர்வின்போதும் இலங்கையில் எரிபொருள் விலை மாற்றமில்லை! கட்டாய தகவல்கள் இன்றி வந்த புற்றுநோய் ஊசிகள் – ஆய்வக பரிசோதனைக்கு முயற்சி ஈரான் நகர்வால் உலக எண்ணெய் சந்தையில் அதிரடி மாற்றம்! விமான நிலையத்தில் மான்களை வேட்டையாடியதாக 7 பேர் கைது அனுர–மஹிந்த பேரணிகளால் சூடுபிடிக்கும் வட மத்திய அரசியல் பிரிக்ஸ் மாநாட்டுக்காக இந்தியா வந்தார் ஷி ஜின்பிங் வன்முறை வரலாற்று நபர்களுடன் ஒப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது – எம்பாப்பே சோகம்! இளைஞர்களை ஏமாற்றும் நிலை நீடிக்காது – செல்வம் அடைக்கலநாதன் உலக சந்தை உயர்வின்போதும் இலங்கையில் எரிபொருள் விலை மாற்றமில்லை! கட்டாய தகவல்கள் இன்றி வந்த புற்றுநோய் ஊசிகள் – ஆய்வக பரிசோதனைக்கு முயற்சி ஈரான் நகர்வால் உலக எண்ணெய் சந்தையில் அதிரடி மாற்றம்! விமான நிலையத்தில் மான்களை வேட்டையாடியதாக 7 பேர் கைது அனுர–மஹிந்த பேரணிகளால் சூடுபிடிக்கும் வட மத்திய அரசியல்
உள்ளூர்

உலக சந்தை உயர்வின்போதும் இலங்கையில் எரிபொருள் விலை மாற்றமில்லை!

September 12, 2026 · National Tamil LK

உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்த போதிலும், உள்நாட்டு எரிபொருள் விலைகளை உடனடியாக உயர்த்தப் போவதில்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (சிபிசி) தெரிவித்துள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாடி, எரிபொருள் விலை உயர்த்தப்படுமா என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என சிபிசி தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்றம் மற்றும் செங்கடல், பாப் எல்-மண்டேப் ஜலசந்தியைச் சுற்றியுள்ள நிகழ்வுகளுக்கு மத்தியில், உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் ஒரு பேரலுக்கு 100 அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளன. அறிக்கையின்படி, பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 104.06 அமெரிக்க டாலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) சுமார் 100 அமெரிக்க டாலராகவும் வர்த்தகமாகி வந்தது.

இலங்கையின் எரிபொருள் விலைகள் இவ்மாத இறுதியில் மீண்டும் திருத்தியமைக்கப்பட உள்ளன.

சில தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்கள் டீசல் விற்பனைக்குக் கட்டுப்பாடு விதிப்பதாக செய்திகள் வெளியான போதிலும், செப்பெட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக ராஜகருணா மேலும் தெரிவித்தார்.

Related Stories

Explore More ›