வன்முறை வரலாற்று நபர்களுடன் ஒப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது – எம்பாப்பே சோகம்!

உலகக் கிண்ணத் தொடரின் போது சமூக வலைத்தளங்களில் செயற்கை நுண்ணறிவு மூலம் தம்மை சர்வாதிகாரியாகச் சித்தரித்து வெளியிடப்பட்ட கருத்துக்கள் குறித்து பிரான்ஸ் நட்சத்திர கால்பந்து வீரர் கிளியான் எம்பாப்பே (Kylian Mbappé) தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
ராணுவ உடைகள் அணிந்தவாறு அரியணையில் அமர்ந்திருப்பது போலவும் சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய தலைவர்களுடன் நிற்பது போலவும் குறித்த நிழற்படங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில் குறித்த நிழற்படங்களில் நகைச்சுவை இருந்தபோதிலும் வரலாற்று சோகங்களுடன் தொடர்புடைய நபர்களுடன் தன்னை ஒப்பிடுவதை தாம் விரும்பவில்லை என்று கிளியான் எம்பாப்பே குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்குத் துயரத்தையும் மரணத்தையும் தந்தவர்களுடன் தன்னை ஒப்பிடுவது சரியல்ல. இது மக்களிடையே உள்ள அரசியல் மற்றும் மனித நேய விழிப்புணர்வின்மையைக் காட்டுகிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.
உலகக் கிண்ண வரலாற்றில் 22 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எம்பாப்பே விளையாட்டு ரீதியான நகைச்சுவைகளை வரவேற்பதாக குறிப்ப்பிட்டுள்ளார்.
அதேவேளை வன்முறையுடன் தொடர்புடைய வரலாற்று நபர்களுடன் ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்வது கடினம் என்றும் கூறியுள்ளார்.




