LATEST
கற்பிட்டியில் படகு கவிழ்ந்து இரு சிறுவர்கள் உயிரிழப்பு! பதுளை வீதி அபிவிருத்திக்கு பாரிய நிதி ஒதுக்கீடு! CIDயிலிருந்து வெளியேறினார் யோஷித ராஜபக்ஷ! சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்! விசாரணைக்காக CIDயில் ஆஜரான யோஷித! உலக யானைகள் தினத்தில் பாதுகாப்புக்கான அழைப்பு! இன்று விண்ணில் நிகழும் வானியல் அதிசயம்! மழை மற்றும் பலத்த காற்று மக்கள் அவதானம்! கற்பிட்டியில் படகு கவிழ்ந்து இரு சிறுவர்கள் உயிரிழப்பு! பதுளை வீதி அபிவிருத்திக்கு பாரிய நிதி ஒதுக்கீடு! CIDயிலிருந்து வெளியேறினார் யோஷித ராஜபக்ஷ! சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்! விசாரணைக்காக CIDயில் ஆஜரான யோஷித! உலக யானைகள் தினத்தில் பாதுகாப்புக்கான அழைப்பு! இன்று விண்ணில் நிகழும் வானியல் அதிசயம்! மழை மற்றும் பலத்த காற்று மக்கள் அவதானம்!
உள்ளூர்

மழை மற்றும் பலத்த காற்று மக்கள் அவதானம்!

August 12, 2026 · National Tamil LK

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

வடமேல் மாகாணத்தில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இதேவேளை சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும். 

காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகம் மணிக்கு சுமார் (30-40) கி.மீ. ஆக இருக்கும். 

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் சிலாபத்திலிருந்து புத்தளம், மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும். 

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் சிலாபத்திலிருந்து புத்தளம், மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். 

எனவே, இந்தக் கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் கடலோடிகள் இது தொடர்பில் அவதானமாகச் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

கொழும்பிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் சுமார் (2.5 – 3.0) மீட்டர் உயரத்திற்கு மேலெழும்பக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related Stories

Explore More ›