நாட்டில் பல பகுதிகளில் இன்று இடைவிடாது மழை!

இலங்கையின் பல பகுதிகளில் இன்றைய தினம் இடைவிடாது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்றைய தினம் இடைக்கிடையே மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. அத்துடன் அநுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மழை நிலைமைக்கு மத்தியிலும் நாட்டின் சில பகுதிகளில் காற்றின் வேகம் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.




