7 உயிர்களை பறித்த சிறைச்சாலை மோதல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் உயிரிழந்த 7 சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் இன்று (08) காலை வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டன.
வாகனப் பேரணியாக கொண்டு வரப்பட்ட உடல்களுக்கு, சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் முன்னிலையில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, உயிரிழந்த அதிகாரிகளின் உடல்கள் இறுதிச் சடங்குகளுக்காக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
கடந்த 6ஆம் திகதி காலை நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது, சிறைக்கைதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி 7 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Follow & Share




