16 வயதிற்குட்பட்டோருக்கான புதிய நடவடிக்கை!

16 வயதிற்குட்பட்ட பிள்ளைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைக்கும் அரசின் முன்னோடித் திட்டம் வெற்றியடைந்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
குடும்பங்களை வலுப்படுத்தும் இந்தத் திட்டத்தின் மூலம், மொபைல் போனுக்கு அடிமையான பிள்ளைகளை அதிலிருந்து மீட்டெடுக்கும் நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
மேலும், சமூக ஊடகங்களைத் தடை செய்வது மட்டுமல்லாமல், கல்வி, Digital Health, மற்றும் மனநல விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த விடயத்தில் நாட்டிற்கு ஏற்ற தேசிய கொள்கையை இந்த ஆண்டுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
Follow & Share




