மண்ணெண்ணெயில் ஓடிய 4 பேருந்துகள் சிக்கின!

காலி – கொழும்பு மற்றும் அம்பலாங்கொடை – எல்பிட்டிய வழித்தடங்களில் சேவையில் ஈடுபட்டிருந்த 4 பயணிகள் பேருந்துகள், மண்ணெண்ணெயை எரிபொருளாக பயன்படுத்தியதாகக் கூறி அம்பலாங்கொடை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சில பேருந்துகள் முழுமையாக மண்ணெண்ணெயிலும், மற்றவை டீசலுடன் மண்ணெண்ணெயைக் கலந்தும் இயக்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சாரதிகள் பலப்பிட்டிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
Follow & Share




