இலங்கை மீதான பொருளாதாரத் தடை இணைய வழி மாநாடு

இலங்கை அரசாங்கத்தின் பலவீனத்தையும் அதன் கையாலாகாத் தன்மையையும் இலங்கையில் நிலவும் தற்போதய நிலவரம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இவற்றை மறைத்து இலங்கை சர்வதேசத்துக்கு தொடர்ந்து போக்குக் காட்டி வருகிறது.

சர்வதேச மனித உரிமைகளை மதிக்கவும் மறுத்து வருகிறது. இலங்கை மீது நடவடிக்கை எடுக்கவும் சர்வதேசம் தயக்கம் காட்டி வருவது விசனத்துக்குரியது.

அதேசமயம் இலங்கையை நிர்ப்பந்தித்து வழிக்குக் கொண்டு வரும் காத்திரமான பொறிமுறைகளை சர்வதேசம் கைவசம் வைத்திருந்தும் அவற்றை பிரயோகிக்க ஏனோ முன்வரவில்லை. பொருளாதாரத் தடை என்பது மிகவும் காத்திரமான பொறிமுறை ஒன்றாகும்.

இங்கு தரப்பட்டுள்ள தரவுகள் யாவும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிப்பது நியாயமானதே என்பதை பறைசாற்றி நிற்கின்றன. தமிழர் சமூகமும், மனித உரிமை ஆர்வலர்களும் இலங்கை மீதான பொருளாதாரத் தடைக்கு ஆதரவு தேடி ஒன்று திரளும் பட்சத்தில் பொருளாதாரத் தடை நோக்கி சர்வதேச சமூகத்தை நகர்த்த முடியும்.

இன அழிப்பு, போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இழைத்தவர்களை நீதியின் முன் நிறுத்தவும், தண்டனைகள் மற்றும் பொறுப்புக்கூறலில் இருந்து தப்பித்து வரும் நிலைமைகளை கட்டுப்படுத்தவும் பொருளாதாரத் தடை பெரிதும் வழி வகுக்கும்.

இந்த முக்கியமான கால கட்டத்தில் சர்வதேச சமூகம் தன் வசமுள்ள காத்திரமான பொறிமுறைகள் அனைத்தையும் குறிப்பாக பொருளாதாரத் தடையை இலங்கை மீது விதிக்க வேண்டும் என்பதை இந்த இணைய வழி மாநாடு முன்னிலைப்படுத்துகிறது.

19-12-2020ல் நடைபெறவிருக்கும் இந்த இணைய வழி மாநாட்டில் பங்குகொள்ளும்படி அனைவரையும் அழைக்கின்றோம். பங்குகொள்வதற்கான விவரங்கள் யாவும் இணைக்கப்பட்டிருக்கும் துண்டுப் பிரசுரங்களில் தரப்பட்டுள்ளன.

இம் மாநாட்டில் கலந்துகொள்ள விரும்புவோர் பின்வரும் இணைப்பினூடாக இணைந்துகொள்ளலாம்.

https://us02web.zoom.us/j/8745256 3875?pwd=OXViNGtPZHp3NHFrcX FxWVF6ZEhRQT09

Passcode: 792999