தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு கிளிநொச்சியில் முன்னெடுப்பு

தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

காலை 9.20 மணிக்கு தேசிய கொடி மாவட்ட அரசாங்க அதிபரால் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது சுனாமி பேரலையால் உயிரிழந்த மக்களிற்கு 2 நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.

இதில் மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்கள், இடர் முகாமைத்துவ நிலைய ஊழியர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.