கொரோனா தொற்று: மேலும் ஐந்து சிறை கைதிகள் உயிரிழப்பு

கொரோனா தொற்று உறுதியான மேலும் ஐந்து சிறை கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதுவரை கொரோனா தொற்று உறுதியாகிய 639 கைதிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மேலும் ஒன்பது சிறைச்சாலை அதிகாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.