திரைப்படம் பார்க்கச் சென்றவர்களுக்கு கொரோனா!சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள கோரிக்கை

யாழ்ப்பாணம் மாநகரிலுள்ள திரையரங்கொன்றுக்கு கடந்த இரண்டு வாரங்கள் திரைப்படம் பார்ப்பதற்குச் சென்றவர்களில் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் உள்ளோரைத் தொடர்புகொள்ளுமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்  ஆ.கேதீஸ்வரன் கேட்டுள்ளார்.

 

இது  தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

காய்ச்சல், தொண்டை நோ, தடிமன், தும்மல் போன்ற அறிகுறிகள் உள்ளோர் வசிக்கும் பிரதேசத்தைச் சேர்ந்த சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை அல்லது வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தின் 24 மணிநேர சேவையான 021 2226666 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.

குறித்த திரையரங்கில் பணியாற்றும் 7 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை  கண்டறியப்பட்டது. இதனையடுத்து, திரையரங்கு தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்நிலையில்  அந்த திரையரங்குக்கு கடந்த  இரண்டு வாரங்களாக சென்றவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதனாலேயே குறித்த திரையரங்குக்கு கடந்த இரண்டு வாரங்கள் திரைப்படம் பார்ப்பதற்குச் சென்றவர்களில் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் உள்ளோரைத் தொடர்புகொள்ளுமாறு கோரியுள்ளார் .