பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நேரத்தில் ஊரடங்கினை தளர்த்துவதா? எதிர்கட்சி அதிர்ச்சி

கொரோனா வைரஸ்நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவரும் நிலையில் மேல்மாகாணத்தில் ஊரடங்கினை தளர்த்துவதறகு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறித்து ஐக்கியமக்கள் சக்தி அதிர்ச்சி வெளியிட்டுள்ளது.
பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்த விடயத்தில் அரசாங்கம் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுகின்றது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண தெரிவித்துள்ளார்.


உயிரிழப்புகளும் நாளாந்த நோயாளர்களும் எண்ணிக்கையும் பல மடங்காக அதிகரித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கத்தை நம்பியிருக்காமல் மக்கள் தங்கள் உடல்நலத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால் மக்களின் மீது சுமைகள் சுமத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர் பொதுமக்களிற்கு சலுகைகளை வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளர்.