வார இறுதியில் எந்தப் பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை- சீனத் தூதரகம்

    சீன ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுடன் வார இறுதியில் ஜூம் உரையாடலொன்றை மேற்கொண்டார் என வெளியாகியுள்ள தகவல்களை சீன நிராகரித்துள்ளது.

    சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இலங்கை ஜனாதிபதியுடன் நேற்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார் என அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

    நிர்வாகத்தினைக் கையாளும் விடயம் தொடர்பில் தங்கள் அனுபவங்களை இரு தலைவர்களும் பகிர்ந்துகொண்டார்கள் என அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
    எனினும் சீனத் தூதரகம் இதனை நிராகரித்துள்ளது.

    சீனாவினதும் இலங்கையினதும் தலைவர்கள் எப்போதும் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வருகின்றனர் என தெரிவித்துள்ள சீனத் தூதரகம் எதிர்வரும் நாட்களில் மேலும் பல தொடர்பாடல்களை எதிர்பார்க்கின்றோம் என குறிப்பிட்டுள்ளது.

    எனினும் இரு தலைவர்களும் சீன கம்யுனிஸ்ட் கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைந்து முன்னெடுத்த செயலமர்வில் இருவரும் இணைந்துகொள்ளவில்லை என சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.