இலங்கையில் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த அமெரிக்காவினால் முடியுமா? -தேவநேசன் நேசையா

தென்கிழக்காசியாவிற்கான (இலங்கை, இந்தியா, மாலைதீவு, இந்தோனேசியா, வியட்நாம்) அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோவின் விஜயத்தின் பிரதான குறிக்கோள் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சிக்கான ஆதரவை அதிகரிப்பதற்காகவேயாகும். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் அவரது இந்த விஜயம் இடம்பெற்றமை இதை தெளிவாகக் காட்டுகின்றது. சீனாவிற்கு எதிரான கடுமையான தெற்கு, தென்கிழக்காசிய பிரதிபலிப்பொன்று அமெரிக்க வாக்காளர்களின் ஒரு பிரிவினரிடமிருந்து ஆதரவைப் பெருக்கும்.

இந்தியாவிலும் மாலைதீவிலும் பொம்பியோவின் விஜயத்திற்கான வரவேற்பு சாதகமானதாக இருந்தது. ஆனால் இந்த இருநாடுகளும் சீனாவிற்கு எதிராக ஏற்கனவே திசைதிரும்பி இருந்தன. ஆனால் இலங்கையை பொறுத்தவரை அவரது விஜயம் மிகவும் வெற்றிகரமாக இருந்ததாகத் தெரியவில்லை. நீண்டகாலமாக இலங்கையில் மிகவும் பாரிய முதலீடுகளை செய்திருக்கும் சீனாவை அந்நியப்படுத்தக்கூடாது என்பதில் இலங்கை மிகவும் ஜாக்கிரதையாகவே நடந்துகொள்ள வேண்டியதாக உள்ளது.

இந்த முதலீடுகள் இன்னும் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன. அத்தகைய பிரம்மாண்டமான முதலீடுகளுக்கு நிகரானதாக அமெரிக்காவினால் கூட செய்யமுடியாதுள்ளது.

ஆசிய நாடுகளுக்கு இடையிலான உறவுமுறையின் வரலாறு ஒரு முக்கியத்துவமான பரிமாணத்தைக்கொண்டது. சுமார் 2000 வருடங்களுக்கு முன்பிருந்தே சீனாவும் இலங்கையும் மிகவும் நீண்ட உறவுகளைக் கொண்டிருந்தன. இலங்கையிலிருந்து பௌத்த மதபோதகர்கள் சீனா, ஜப்பான் மற்றும் அயல்நாடுகளுக்குச் சென்றார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுமுறை செம்மையானதும் சஞ்சலமானதாகவும் இருந்து வந்திருக்கின்ற அதேவேளை, பல தசாப்தங்களாக ஏற்ற இறக்கங்களைக் கண்டுவந்துள்ளது.

இந்த இயக்கவிசையை அடிப்படையாகக்கொண்டு நோக்கும் போது சீனாவை அந்நியப்படுத்துவது தனக்குக் கட்டுப்படியாகாத ஒன்றாக இலங்கை அரசு நம்பக்கூடும். உண்மையில் இந்தியா மீது அளவுக்கதிகமாக தங்கி இருப்பதைத் தவிர்ப்பதற்கு இலங்கையில் சிலவகையான சீனப் பிரசன்னம் அவசியமானது என்று கொழும்பு கருதக்கூடும். குறிப்பாக ராஜபக்ச குடும்பம் இந்தியாவுடனான உறவுகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை சீனாவுடன் நீண்டகாலமாக நல்ல இராஜதந்திர உறவுகளைத் தொடர்ந்து வளர்த்துக்கொண்டு வந்திருக்கிறது.

அதேவேளை மறுபுறத்தில் குறிப்பாக இந்தியாவுடனான அதன் உறவுகள் மிகவும் திருப்திகரமானவையாக இல்லாத காரணத்தினால் சீனாவை பொறுத்தவரை மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தில் ஒரு மூலோபாய அமைவிடத்தில் இருக்கும். இலங்கை மிகவும் பெறுமதியான பங்காளியாக விளங்குகின்றது.

பசுபிக் பிராந்தியத்தில் சீனாவிற்கு தெரிவுகள் இருக்கலாம்.

ஆனால் இந்துசமுத்திரத்தில் இலங்கையுடனான நல்ல உறவுகள் சீனாவிற்கு தவிர்க்க முடியாத அளவிற்கு அவசியமானதாக உள்ளது. அதன் விளைவே இந்தளவு பிரம்மாண்டமான அளவிலான முதலீடுகள்.

இலங்கையின் அணிசேராக் கொள்கையைப் பற்றி இலங்கையின் உத்தியோகபூர்வ அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால் இது ஒரு முக்கியமான காரணியாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஏனென்றால் அணிசேரா இயக்கம் இப்போது உண்மையில் செயலிழந்துவிட்டது. அந்த இயக்கத்துடன் தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட நேரு, என்ருமா, டிட்டோ, நஸார், சுகார்னோ மற்றும் பண்டாரநாயக்க போன்ற மேன்மைமிகு தலைவர்கள் இன்று இல்லை. அவர்களுக்குப் பிறகு பதவிக்கு வந்தவர்களுக்கு முன்னுரிமைகள் இருக்கின்றன. அத்துடன் மூன்றாம் உலக நாடுகளின் ஒருமைப்பாடுகள் பற்றிய அதே நோக்கும் இவர்களிடம் இல்லை.

மேலும் காலப்போக்கில் ஐரோப்பிய காலனித்துவம் பற்றிய நினைவும் காலனித்துவத்திற்கு எதிராக அணிதிரட்டல்களைச் செய்வதற்கான ஊக்கமும் வலிமையும் மறைந்து போய்க்கொண்டிருக்கின்றன. அணிசேரா இயக்கம் என்பது ஒருபுறத்தில் அமெரிக்காவையும் மேற்கு ஐரோப்பாவையும் கொண்ட முகாமிற்கும் மறுபுறத்தில் சோவியத் யூனியனையும் கிழக்கு ஐரோப்பாவையும் கொண்ட முகாமிற்கும் இடையிலான போட்டாபோட்டியின் பின்புலத்தில் கட்டியெழுப்பப்பட்டதாகும். சோவித் முகாமும் தகர்ந்த அதேவேளை, உலக விவகாரங்களில் மையப்பாத்திரத்தை வகிப்பதிலிருந்து ஐரோப்பாவும் அருகிப்போன நிலையில் அணிசேரா இயக்கத்தின் அத்திவாரம் உண்மையில் காணாமல்போய்விட்டது.

இலங்கையில் கொள்கைவகுப்பாளர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்குத் தேவைப்படுவது எல்லாம் நாட்டில் சீனாவின் பிரம்மாண்டமான முதலீடுகளேயாகும். அந்த முதலீடுகள் இலங்கையில் பிரகாசமாகத் தென்படுகின்ற உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களாக மிளிர்கின்றன. இந்தத் திட்டங்கள் தொடர்கின்றன. மேலும் பலவருடங்களுக்குத் தொடரும். வேறெந்த ஒரு நாடும் அல்லது நிறுவனமுமே ஒப்பீட்டளவில் இத்தகைய முதலீட்டைச் செய்யமுடியாது.

இந்தத் திட்டங்களின் தகுதிகள் பற்றி பெறுமதியான விவாதங்கள் இடம்பெறுகின்றன. இவை நாட்டுக்கா அல்லது தனிப்பட்டவர்களுக்கா நன்மையளிக்கும் என்ற கேள்வியும் எழுகிறது. உண்மையில் இலங்கை கடலில் மூழ்கி மேலும் கூடுதலானளவிற்கு சீனாவில் தங்கியிருக்கின்ற நிலைமை ஏற்படலாம். அம்பாந்தோட்டை துறைமுகம் 99 வருடகாலக் குத்தகைக்கு சீனாவினால் கையாளப்படவிருக்கிறது. இது இலங்கை சீனா மீது நீண்டகாலமாக தங்கியிருக்கப்போகின்றது என்பதற்கான அறிகுறியாக இருக்கிறது.

தெற்காசியாவிலும் தென்கிழக்காசியாவிலும் கிழக்காசியாவிலும் சீனாவைக் கட்டுப்படுத்தி வைப்பதற்கு அமெரிக்காவிற்குக் கூடுதல் எண்ணிக்கையில் நேசநாடுகள் தேவைப்படுகின்றது. இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் முதலீடுகளைப் போன்று பிரம்மாண்டமான முதலீடுகளை சமாந்தரமாக செய்யாதபட்சத்தில் இதுவிடயத்தில் அமெரிக்காவினால் குறிப்பிடத்தக்கதாக எதையும் செய்துவிடமுடியாது. அமெரிக்கா அதை செய்யத் தயாராகவும் இல்லை. செய்யவும் இயலாது. அமெரிக்க ஜனாதிபதித்தேர்தல் முடிவுகள் அமெரிக்காவுடனும் சீனாவுடனுமான இலங்கையின் உறவுமுறையில் குறிப்பிடத்தக்க எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்துவது சாத்தியமில்லை.

தெற்காசிய மற்றும் தென்கிழக்காசியாவிற்கான (இலங்கை, இந்தியா, மாலைதீவு, இந்தோனேசியா, வியட்நாம்) அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோவின் விஜயத்தின் பிரதான குறிக்கோள் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சிக்கான ஆதரவை அதிகரிப்பதற்காகவேயாகும். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் அவரது இந்த விஜயம் இடம்பெற்றமை இதை தெளிவாகக் காட்டுகின்றது. சீனாவிற்கு எதிரான கடுமையான தெற்கு, தென்கிழக்காசிய பிரதிபலிப்பொன்று அமெரிக்க வாக்காளர்களின் ஒரு பிரிவினரிடமிருந்து ஆதரவைப் பெருக்கும்.

இந்தியாவிலும் மாலைதீவிலும் பொம்பியோவின் விஜயத்திற்கான வரவேற்பு சாதகமானதாக இருந்தது. ஆனால் இந்த இருநாடுகளும் சீனாவிற்கு எதிராக ஏற்கனவே திசைதிரும்பி இருந்தன. ஆனால் இலங்கையை பொறுத்தவரை அவரது விஜயம் மிகவும் வெற்றிகரமாக இருந்ததாகத் தெரியவில்லை. நீண்டகாலமாக இலங்கையில் மிகவும் பாரிய முதலீடுகளை செய்திருக்கும் சீனாவை அந்நியப்படுத்தக்கூடாது என்பதில் இலங்கை மிகவும் ஜாக்கிரதையாகவே நடந்துகொள்ள வேண்டியதாக உள்ளது.

இந்த முதலீடுகள் இன்னும் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன. அத்தகைய பிரம்மாண்டமான முதலீடுகளுக்கு நிகரானதாக அமெரிக்காவினால் கூட செய்யமுடியாதுள்ளது.

ஆசிய நாடுகளுக்கு இடையிலான உறவுமுறையின் வரலாறு ஒரு முக்கியத்துவமான பரிமாணத்தைக்கொண்டது. சுமார் 2000 வருடங்களுக்கு முன்பிருந்தே சீனாவும் இலங்கையும் மிகவும் நீண்ட உறவுகளைக் கொண்டிருந்தன. இலங்கையிலிருந்து பௌத்த மதபோதகர்கள் சீனா, ஜப்பான் மற்றும் அயல்நாடுகளுக்குச் சென்றார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுமுறை செம்மையானதும் சஞ்சலமானதாகவும் இருந்து வந்திருக்கின்ற அதேவேளை, பல தசாப்தங்களாக ஏற்ற இறக்கங்களைக் கண்டுவந்துள்ளது.

இந்த இயக்கவிசையை அடிப்படையாகக்கொண்டு நோக்கும் போது சீனாவை அந்நியப்படுத்துவது தனக்குக் கட்டுப்படியாகாத ஒன்றாக இலங்கை அரசு நம்பக்கூடும். உண்மையில் இந்தியா மீது அளவுக்கதிகமாக தங்கி இருப்பதைத் தவிர்ப்பதற்கு இலங்கையில் சிலவகையான சீனப் பிரசன்னம் அவசியமானது என்று கொழும்பு கருதக்கூடும். குறிப்பாக ராஜபக்ச குடும்பம் இந்தியாவுடனான உறவுகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை சீனாவுடன் நீண்டகாலமாக நல்ல இராஜதந்திர உறவுகளைத் தொடர்ந்து வளர்த்துக்கொண்டு வந்திருக்கிறது.

அதேவேளை மறுபுறத்தில் குறிப்பாக இந்தியாவுடனான அதன் உறவுகள் மிகவும் திருப்திகரமானவையாக இல்லாத காரணத்தினால் சீனாவை பொறுத்தவரை மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தில் ஒரு மூலோபாய அமைவிடத்தில் இருக்கும். இலங்கை மிகவும் பெறுமதியான பங்காளியாக விளங்குகின்றது.

பசுபிக் பிராந்தியத்தில் சீனாவிற்கு தெரிவுகள் இருக்கலாம்.

ஆனால் இந்துசமுத்திரத்தில் இலங்கையுடனான நல்ல உறவுகள் சீனாவிற்கு தவிர்க்க முடியாத அளவிற்கு அவசியமானதாக உள்ளது. அதன் விளைவே இந்தளவு பிரம்மாண்டமான அளவிலான முதலீடுகள்.

இலங்கையின் அணிசேராக் கொள்கையைப் பற்றி இலங்கையின் உத்தியோகபூர்வ அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால் இது ஒரு முக்கியமான காரணியாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஏனென்றால் அணிசேரா இயக்கம் இப்போது உண்மையில் செயலிழந்துவிட்டது. அந்த இயக்கத்துடன் தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட நேரு, என்ருமா, டிட்டோ, நஸார், சுகார்னோ மற்றும் பண்டாரநாயக்க போன்ற மேன்மைமிகு தலைவர்கள் இன்று இல்லை. அவர்களுக்குப் பிறகு பதவிக்கு வந்தவர்களுக்கு முன்னுரிமைகள் இருக்கின்றன. அத்துடன் மூன்றாம் உலக நாடுகளின் ஒருமைப்பாடுகள் பற்றிய அதே நோக்கும் இவர்களிடம் இல்லை.

மேலும் காலப்போக்கில் ஐரோப்பிய காலனித்துவம் பற்றிய நினைவும் காலனித்துவத்திற்கு எதிராக அணிதிரட்டல்களைச் செய்வதற்கான ஊக்கமும் வலிமையும் மறைந்து போய்க்கொண்டிருக்கின்றன. அணிசேரா இயக்கம் என்பது ஒருபுறத்தில் அமெரிக்காவையும் மேற்கு ஐரோப்பாவையும் கொண்ட முகாமிற்கும் மறுபுறத்தில் சோவியத் யூனியனையும் கிழக்கு ஐரோப்பாவையும் கொண்ட முகாமிற்கும் இடையிலான போட்டாபோட்டியின் பின்புலத்தில் கட்டியெழுப்பப்பட்டதாகும். சோவித் முகாமும் தகர்ந்த அதேவேளை, உலக விவகாரங்களில் மையப்பாத்திரத்தை வகிப்பதிலிருந்து ஐரோப்பாவும் அருகிப்போன நிலையில் அணிசேரா இயக்கத்தின் அத்திவாரம் உண்மையில் காணாமல்போய்விட்டது.

இலங்கையில் கொள்கைவகுப்பாளர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்குத் தேவைப்படுவது எல்லாம் நாட்டில் சீனாவின் பிரம்மாண்டமான முதலீடுகளேயாகும். அந்த முதலீடுகள் இலங்கையில் பிரகாசமாகத் தென்படுகின்ற உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களாக மிளிர்கின்றன. இந்தத் திட்டங்கள் தொடர்கின்றன. மேலும் பலவருடங்களுக்குத் தொடரும். வேறெந்த ஒரு நாடும் அல்லது நிறுவனமுமே ஒப்பீட்டளவில் இத்தகைய முதலீட்டைச் செய்யமுடியாது.

இந்தத் திட்டங்களின் தகுதிகள் பற்றி பெறுமதியான விவாதங்கள் இடம்பெறுகின்றன. இவை நாட்டுக்கா அல்லது தனிப்பட்டவர்களுக்கா நன்மையளிக்கும் என்ற கேள்வியும் எழுகிறது. உண்மையில் இலங்கை கடலில் மூழ்கி மேலும் கூடுதலானளவிற்கு சீனாவில் தங்கியிருக்கின்ற நிலைமை ஏற்படலாம். அம்பாந்தோட்டை துறைமுகம் 99 வருடகாலக் குத்தகைக்கு சீனாவினால் கையாளப்படவிருக்கிறது. இது இலங்கை சீனா மீது நீண்டகாலமாக தங்கியிருக்கப்போகின்றது என்பதற்கான அறிகுறியாக இருக்கிறது.

தெற்காசியாவிலும் தென்கிழக்காசியாவிலும் கிழக்காசியாவிலும் சீனாவைக் கட்டுப்படுத்தி வைப்பதற்கு அமெரிக்காவிற்குக் கூடுதல் எண்ணிக்கையில் நேசநாடுகள் தேவைப்படுகின்றது. இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் முதலீடுகளைப் போன்று பிரம்மாண்டமான முதலீடுகளை சமாந்தரமாக செய்யாதபட்சத்தில் இதுவிடயத்தில் அமெரிக்காவினால் குறிப்பிடத்தக்கதாக எதையும் செய்துவிடமுடியாது. அமெரிக்கா அதை செய்யத் தயாராகவும் இல்லை. செய்யவும் இயலாது. அமெரிக்க ஜனாதிபதித்தேர்தல் முடிவுகள் அமெரிக்காவுடனும் சீனாவுடனுமான இலங்கையின் உறவுமுறையில் குறிப்பிடத்தக்க எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்துவது சாத்தியமில்லை.