சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு ஆலோசனை

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பான நீதி அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

இதன்படி சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவினால் திருத்தப்பட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் சில வெளியிடப்பட்டுள்ளன.

சிறைச்சாலைகளில் பிணை வழங்கக்கூடிய கைதிகளுக்கு பிணை வழங்குமாறும் ஏனைய சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.