கொடிய சட்டத்தின் பிடியில் தமிழ் அரசியல் கைதிகள்! இன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் -கஜேந்திரன்

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கும் கொரோனா வைரஸால் ஆபத்து உண்டென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமையைக் கருத்தில்கொண்டு நிபந்தனை அற்று அவர்களை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது பேசிய அவர்,

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கும் கொரோனா வைரஸால் அச்சுறுத்தலும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.

 

தொற்றா நோய் காரணமாகவே பலருக்கு இந்த தொற்று பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது என ஜனாதிபதியும் கூறியிருக்கின்றார்.

அந்தவகையில் மிகவும் கொடிய சட்டமாகிய பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்தத் தமிழ் அரசியல் கைதிகளில் பலர் இன்று நீரிழிவு நோய் உட்பட தொற்றாநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே, தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமையைக் கருத்தில்கொண்டு நிபந்தனை அற்று அவர்களை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அல்லது குறைந்த பட்சம் பிணையில் சரி அவர்களை விடுவிக்க வேண்டும் என்றார்.