சீன கப்பலொன்று அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறித்து அறிந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய எந்த விடயமும் குறித்தும் இந்தியா உன்னிப்பாக அவதானிக்கின்றது அவற்றை பாதுகாப்பதற்கான அனைதத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என அரின்டம் பக்சி தெரிவித்துள்ளார்.