தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை-சிங்கள பாடசாலைகள் திறப்பு

தமிழர் தாயகத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 25ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்படுகின்றது.

கல்வி இராஜாங்க அமைச்சர்  இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 24ஆம் திகதி தீபாவளி தினம் என்பதால், அதனையடுத்த தினமான செவ்வாய்க்கிழமை மாணவர்களின் வரவில் வீழ்ச்சி காணப்படும் என்பதை கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன், இந்த விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 29ஆம் திகதி பாடசாலை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.