திருகோணமலையிலிருந்து இயந்திரப்படகில் அவுஸ்திரேலியா சென்ற 20 பேர் கைது

திருகோணமலையில்  இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக இயந்திரப்படகில் பயணித்த 20 பேரை சம்பூர் கடல் பரப்பில் வைத்து இன்று (5) திங்கட்கிழமை அதிகாலையில் கைதுசெய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கiமைய சம்பூர்  பரப்பில் சம்பவதினமான இன்று அதிகாலை 3 மணியளவில் ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப்படகு பிரயாணித்தபோது  அதனை கடற்படையினர் சுற்றிவளைத்து சோதனையிட்டபோது அதில் ஒரு பெண் உட்பட 20 பேர் அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக பயணித்துள்ளமை கண்டதையடுத்து அவர்களை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை  திருகோணமலை கடற்பட முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் இதில் களுவாஞ்சிக்குடி நாகர்கோவில் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும்  இவர்களை விசாரணையின் பின்னர் திருகோணமலை தலைமைபொலிசாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.