பேருந்து விபத்து தொடர்பில் காவல்துறை விசாரணை தீவிரம்!

பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியின் 7ஆவது கிலோமீற்றர் பகுதியில் பயணிகள் பேருந்தொன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Follow & Share




