2027 வரவு-செலவுத் திட்டம் குறித்து அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள்!

2027 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு மசோதாவின் இரண்டாம் வாசிப்பு, 2026 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
நிதி ஒதுக்கீட்டு மசோதா செப்டம்பர் 18 அன்று அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து அக்டோபர் 7 அன்று நாடாளுமன்றத்தில் அதன் முதல் வாசிப்பு நடைபெறும் என்றும் நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு அமைச்சகத்திற்குமான முன்மொழியப்பட்ட செலவின ஒதுக்கீடுகளைக் கொண்ட 2027 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு மசோதாவின் வரைவு, செப்டம்பர் 14 ஆம் தேதி ஒப்புதலுக்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சகத்தின் தகவல்படி, பட்ஜெட் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நவம்பர் 13 முதல் நவம்பர் 20 வரை நடைபெறும். குழு நிலை விவாதம் நவம்பர் 21 முதல் டிசம்பர் 14 வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது




