யாழில் ஏழு வயதுச் சிறுமிக்கு எமனாக மாறிய ஊஞ்சல்

ஊஞ்சல் கயிறு கழுத்தில் சிக்குண்டதால் மயக்கமடைந்த சிறுமி சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

கோயில் வீதி – யாழ்ப்பாணம் பகுதியினை சேர்ந்த உயிந்தன் சாதுரியா வயது – 7 என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 3ஆம் திகதி ஊஞ்சல் ஆடுவதற்காக மரத்தில் இருந்த ஊஞ்சல் கயிற்றினை கதிரையில் ஏறி எடுக்க முற்பட்டுள்ளார்.

கயிற்றில் போட்டிருந்த முடிச்சியினை அவிழ்க்க முற்பட்ட போது கயிறு தவறுதலாக சிறுமியின் கழுத்தில் சிக்குண்டுள்ளது.

இதன் போது சிறுமி ஏறி நின்ற கதிரை தவறுதலாக விழ்ந்துள்ளது. இதனால் சிறுமி நிலைகுழைந்து விழ்ந்ததனால் கயிறு கழுத்தினை இறுக்கியுள்ளது.

வெளியில் வந்த சிறுமியின் தாயார், மகள் கயிற்றில் தொங்கிக் கொண்டு இருப்பதனை பார்த்து உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமியை அனுமதித்தார்.

அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி இன்று உயிரிழந்துள்ளார்.

இறப்பு விசாரணையினை வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது