யாழ்ப்பாணம் வடமராட்சியில் வாள்வெட்டு -பெண் உட்பட மூவர் படுகாயம்

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் பகுதியில் இன்று (29) இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் பெண் உட்பட்ட மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இ்த சம்பவத்தில் கரணவாய் பகுதியைச் சேர்ந்த சந்திரமோகன் சஜிந்தன் (வயது-29), சண்முகம் சிவஞானசுந்தரம் (வயது-55), தேவராசா ரஞ்சிதா (வயது-35) ஆகியோரே வெட்டுக் காயங்களுக்கு இலக்காகியவர்களாவர்.

சம்பவத்தில் காயமடைந்த பெண்ணுக்கு பல்வேறு பகுதிகளிலும் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக தெரியவருகிறது.

இவர்கள் அனைவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.