சாரதியின் அசமந்தப் போக்கினால் சிறுவர் உட்பட மூவர் படுகாயம்

கிளிநொச்சி ஏ-9 வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் சிறுவர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துக் குறித்து தெரிய வருகையில், கிளிநொச்சி வலயக்கல்விப் பணிமனை அருகில் டிப்பர் வாகனத்தை சாரதி திடீரென நிறுத்த முற்பட்ட வேளை – அதே திசையில் வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டி டிப்பரின் பின்பகுயில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.

இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவர் உட்பட மூவர் காயம் படுகாயமுற்ற நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.