இலங்கையில் 57,000 ஐக் கடந்தது டெங்குப் பாதிப்பு!

வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 57,000 ஐக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. இதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 57,668 ஆக உயர்ந்துள்ளதுடன், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் புதிதாக 1,253 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ரீதியாக அதிகப்படியாக கொழும்பு மாவட்டத்தில் 11,811 நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 11,443 நோயாளர்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Follow & Share




